கல்லா விளைஞ னொருவனைக் கூஉய்
வல்லாங்குச் செய்து மணிமே கலைதன்
இணைவள ரிளமுலை யேந்தெழி லாகத்துப்
புணர்குறி செய்து பொருந்தின ளென்னும்
பான்மைக் கட்டுரை பலர்க்குரை யென்றே
காணம் பலவுங் கைநிறை கொடுப்ப
ஆங்கவன் சென்றவ் வாயிழை யிருந்த
பாங்கி லொருசிறைப் பாடுசென் றணைதலும்
தேவி வஞ்ச மிதுவெனத் தெளிந்து
நாவியன் மந்திரம் நடுங்கா தோதி
ஆண்மைக் கோலத் தாயிழை யிருப்பக்
காணம் பெற்றோன் கடுந்துய ரெய்தி
அரச ருரிமையி லாடவ ரணுகார்
நிரயக் கொடுமகள் நினைப்பற்றி யேனென்
றகநகர் கைவிட்ட டாங்கவன் போயபின்
மணிமேகலை 23 சிறைவிடு காதை 45 – 55
மணிமேகலை ஐம்பெரும் தமிழ்க் காப்பியங்களுள் ஒன்று. இக்காப்பியத்தை
இயற்றியவர் சீத்தலைச் சாத்தனார்.மணிமேகலை பௌத்த சமயம் சார்ந்த நூலாகும்.
மணிமேகலையின் காலம் பொ. ஊ. 450–550 என்று கருதப்படுகிறது.
பாடல் விளக்கம்: மணிமேகலையின் மீது அவள் விருப்பத்திற்கு மாறாக காதல் கொள்ளும் இளவரசன் உதயகுமரன் , மணிமேகலையின் தோழி காயசண்டிகையின் கணவனான வித்தியாதரனால் வெட்டிக் கொல்லப்படுகிறாள். இதனால் சிறையில் அடைக்கப்படுகிறாள் மணிமேகலை தான் தன் மகனின் மரணத்திற்கு காரணம் மணிமேகலை தான் என எண்ணிய அரசி இராசமாதேவி முரடன் ஒருவனுக்கு நிறைந்த பொருளைக் கொடுத்து மணிமேகலையை பாலியல் வன்கொடுமை செய்யச் சொல்கிறாள். அவனும் அவ்வாறே செய்ய சிறைசாலைக்கு சென்றான். அரசியின் வஞ்சதை தன் முக்காலம் உணரும் சக்தியால் உணர்ந்த மணிமேகலை ஒரு மந்திரம் சொல்லித் தன்னை ஆணாக மாற்றிக்கொண்டு ிறையில் வீற்றிருந்தாள். சிறைசாலைக்கு சென்ற அந்த முரடன் ணிமேகலையின் ஆண் உருவம் கண்டு பயந்து ஓடிவிட்டான் என்கிறது மணிமேகலை.
Manimegalai is one of the five great Tamil epics, written by Sitala Chatanar. Manimegala epic was written based on the principles of Buddhist and the period
was assumed B.C. 450–550.
Song Description: Prince Udayakumaran, who falls in love with Manimekalai against her will, is hacked to death by Vidhyathara, the husband of Manimekalai’s friend Kayasandigai. Because of this Manimegalai is imprisoned. Thinking that Manimekalai is the cause of her son's death, Queen Ramadevi gives a Rogue man full of stuff and asks him to sexually assault Manimekalai. He went to prison to do the same. Manimekalai, realizing the queen’s deceit with her clairvoyant power, she cast a spell and turned herself into a man and was in the prison. Manimekalai says that the rogue who went to the jail got scared and ran away seeing the male figure of Manimekalai.
